அமெரிக்கா : வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 19 வயது இளைஞர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் செய்வதற்காக அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளூங்டன் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று முன்தின இரவு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். 

அப்போது அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சுட ஆரம்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் நான்கு புறமும் சிதறி ஓடினர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 year old killed in shooting at mall in America


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->