மக்களே உஷார்... இன்றும், நாளையும் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும்.! வானிலை மையம் எச்சரிக்கை..!
Today and tomorrow temperature will be increase in tamilnadu
தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,
இன்று மற்றும் நாளை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மேலும் தமிழகத்தில் நேற்று சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Today and tomorrow temperature will be increase in tamilnadu