தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் வறுத்தெடுக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தியது. இதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.8 டிகிரியும், கடலூரில் 103.28 டிகிரியும் வெயில் பதிவாகியது. மேலும் ஈரோடு, மதுரை, நாகை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temperature will increase in Tamil Nadu today and tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->