தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் நேற்று முன்தினம் தமிழகத்தில் 14 இடங்களில் சதமடித்தது. இந்நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 104.90 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 10.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரியும், திருத்தணி, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய இடங்களில் 103.10 டிகிரி ஃபாரன்ஹீட் என தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In 15 places in Tamil Nadu the temperature exceeded 100 degrees


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->