சுட்டெரிக்கும் வெயில்... 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்...! வானிலை மையம் தகவல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் வெயில் வாட்டி வதைத்தாலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இருப்பினும், நேற்று சென்னை, தூத்துக்குடி, மதுரை, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 17 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றும் மற்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) அசௌகரியம் ஏற்படலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 degree Celsius temperature increase in tamilnadu for 2 days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->