காலையிலேயே 11 மாவட்டங்களை குளிரூட்டும் செய்தி.!! வெளுக்க போகும் கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. எனினும் தென் தமிழகத்திலும், மேற்கு தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

அதேபோன்று நேற்று மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 districts of Tamil Nadu will receive heavy rain today and tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->