இளைஞரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய நண்பர்கள், காவல்துறை விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேனிக்கோட்டை பகுதியில் விபத்தி காயமடைந்ததாக சக்திவேல் என்ற இளைஞர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, சக்திவேல் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது சக்திவேல் குளிங்க் கிளாஸை தராததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அவரை பலமாக தாக்கினர். மயக்கமடைந்த அவரை விபத்தில் அடிப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது.

இதனை அடுத்து இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். மேலும், ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Killed In Krishnagiri


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->