15 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.! போக்சோவில் இளைஞர் கைது.!
Youth arrested for 7 month pregnant a 15 year old girl in tiruppur
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோபில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டின் அருகே வசித்து வரும் வசந்தகுமார்(22) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணமும் செய்துள்ளார். இதையடுத்து, நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர் அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய வசந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
Youth arrested for 7 month pregnant a 15 year old girl in tiruppur