வீடு புகுந்து இளம் பெண் வெட்டி படுகொலை.. கோவையில் பரபரப்பு.!!
young woman was hacked to death in Coimbatore
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் ரேணுகா என்ற பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் பெட்டிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதால் நகை, பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இளம் பெண் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young woman was hacked to death in Coimbatore