தென்காசி | தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி! வேதனையில் சக மாணவி எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் தோழியாக இருந்த மாணவியின் மரணத்தால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்:

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன் காமராஜ். இவரது மகள் திலகா (வயது 20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார். 

இவர் கல்லூரில் படிக்கும் போது, பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த சகதோழியாக இருந்த மற்றொரு மாணவியுடன் நெருங்கிய நட்பாக பழகி வந்துள்ளார். 

திலகாவின் நெருங்கிய தோழி சில மாதங்களுக்கு முன்பு தீடிரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த திலகா உடல் நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திலகா தனது அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, சகதோழியின் மரணத்தை ஏற்கமறுத்து தானும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman suicide issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->