பணம் தர மறுத்த தாய் - மனைவி பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


பணம் தர மறுத்த தாய் - மனைவி பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

சென்னையில் உள்ள ஓட்டேரி அருகே நம்மாழ்வார்பேட்டை பராக்கா பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. பிளம்பர் தொழில் செய்துவரும் இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருட காலம் தான் ஆகிறது. 

இந்த நிலையில், நேற்று தேவிக்கு பிறந்த நாள் வந்ததால், அவருக்கு புது துணி வாங்கி கொடுப்பதற்காக இளையராஜா தனது தாயாரிடம் ரூ.2 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுத்துள்ளார். 

இதனால் விரக்தி அடைந்த இளையராஜா, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தனது மனைவி தேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு பின்னர் படுக்கை அறைக்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் இளையராஜா வெளியில் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு இளையராஜா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டபடி இருந்துள்ளார்.

இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து  இளையராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மனைவி பிறந்தநாளுக்கு புடவை வாங்க பணம் தர மறுத்ததால் வாலிபர் எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide in chennai otteri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->