நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் ஆபாச நடந்து கொண்ட இளைஞர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விளநகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 25). இதில் ஜெயப்பிரகாஷ் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் சிறுமியின் வாயை மூடி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து வேகமாக சென்ற சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man harassment to school girl in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->