திருமணம் ஆகி 2 மாதங்களில் காணாமல் போன புதுமண பெண்! காதலனுடன் ஓட்டமா? போலீசார் விசாரணை!
women kidnapped after 2 months of marriage
திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 22). இவரது மனைவி ஷர்மிளா தேவி (வயது 21) இவர் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவமனவில் உதவி செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இருவருக்கும் கடந்த மே 22ஆம் தேதி திருமணம் நடந்தது. புது தம்பதிகளான இவர்கள் சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி வந்தனர்.
ஷர்மிளா தேவி கணவர் வீட்டில் இருந்தபடி தினமும் வேலைக்கு சென்று வந்தார். அவர் வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டுச் சென்று, பின்னர் மாலை வெகுநேரமாகும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த், மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அதில் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன சர்மிளா தேவி யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா? அல்லது கணவரை தவிர்க்க வீட்டு காதல் விவகாரத்தில் ஓட்டம் பிடித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமண பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
women kidnapped after 2 months of marriage