ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவனை கடத்தி சென்ற இளம்பெண் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவனை கடத்தி சென்ற இளம் பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாணவன் காணாமல் போனதால் அவருடைய பெற்றோர் வெள்ளக்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பெரிய வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் காயத்ரி என்ற பெண்ணுடன் ஓசூர் பகுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் காயத்ரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women kidnapped 17 years old boy in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->