அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.!
woman passanger argument to officer in chennai airport
விமான நிலையத்தில் பெண் பயணியின் பெட்டியை அதிகாரி சோதனை செய்ய முயன்ற போது, அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தனது மகளுடன் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்தது.
அதன் பின்னர், அந்த பெண் தனது மக்களுடன் விமானத்திற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினார். அப்போது, சுங்க இலாகா துணை ஆணையர், அந்த பெண் பயணியிடம் அவரது பெட்டியை சோதனை செய்ய வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அதிகாரி அந்த பெண் பயணியின் பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
woman passanger argument to officer in chennai airport