வாட்ஸ் அப் டிபி பார்த்து வந்த காதல்..பேசியே மயக்கிய மாயக்குரல்.. பல லட்சங்களை பறிகொடுத்த 90ஸ் கிட்..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சரண்யா என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், ஹாய், சாப்டியா? என் ஆரம்பித்த இவர்களின் உரையாடல்கள் ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இளமையாக இருப்பது போல் சரண்யா வைத்திருந்த டிபியை பார்த்து நாகராஜன் மயங்கியுள்ளார். சரண்யாவும் தனக்கு திருமணமானதை மறைத்து தொடர்ந்து நன்கு பேசி வந்த நிலையில் சரண்யாவின் குரலில் மெய்மறந்து போன நாகராஜனிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும், உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனவும் கூறி திருமணம் செய்வது போல் பேச்சை துவக்கிய சரண்யா நாகராஜனிடம் பணம் கறக்க ஆரம்பித்துள்ளார்.

சரண்யாவின்  மருத்துவ செலவு, சொந்த செலவு என கேட்கும் போதெல்லாம் கூகுள் பேயில் பணத்தை வாரி கொடுத்திருக்கிறார் நாகராஜன். வங்கியில் கடன் வாங்கி நாகராஜன் செலவு செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். இவ்வாறு, நாகராஜனிடம் இருந்து சிறுக சிறுக சுமார் 14 லட்ச ரூபாய் பணத்தை சரண்யா பெற்றதாக தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் பணப் பிரச்சினையிலும், கடன் பிரச்சினையிலும் சிக்கிய நாகராஜன் கொடுத்த பணத்தில் சிறு தொகையை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால், நாகராஜன் உஷார் ஆனதாக எண்ணிய சரண்யா அவரிடம் பழகுவதை கொஞ்சமாக கொஞ்சமாக நிறுத்தி, ஒரு கட்டத்தில் செல்போன், முகநூல், வாட்ஸ் அப் என அனைத்திலும் நாகராஜனை ப்ளாக் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜன் சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் நடந்தவற்றை கூறி புகாரளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில், சரண்யாவின் செல்போனை சிக்னலை வைத்து அவரை தேடி வந்த போலீசார், சரண்யாவை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த நாகராஜன் தான் கொடுத்த 14 லட்சத்தையும் சரண்யா ஸ்விகி, ஜொமேட்டோவில் சாப்பாடு வாங்கியே காலி செய்ததாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, சரண்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏமாற்றுபவர்கள் என்னதான் காதல் வலை விரித்தாலும், சிக்காமல் நழுவிக் கொண்டால் பணமும் பத்திரமாக இருக்கும். காதல் ஆசை வார்த்தையில் சிக்கிய 90ஸ் கிட்ஷின் பணமும் வாழ்க்கையும் தற்பொழுது பறிப் போய் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman cheated a man hiding her marriage in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->