அலங்காநல்லூர் : கிணற்றில் மிதந்த பெண் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


அலங்காநல்லூர் : கிணற்றில் மிதந்த பெண் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.!

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து பரிசோதனை நடத்தினர்.

அதில், அந்த இளம்பெண்ணின் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கிணற்றில் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman body rescue in well near alanganallur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->