திண்டுக்கல் : மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு நத்தம் அருகே செங்குறிச்சி எஸ்.ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா தனது 11 வயது குழந்தையுடன் வந்து திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதை பார்த்ததும் அங்கிருந்த போலீஸார் ஓடி வந்து அவர்கள் இருவர் மீது தண்ணீர் ஊற்றி கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில், மல்லிகாவுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் உள்ளார்.

இருப்பினும், கணவர் ஆனந்தராஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் மல்லிகாவையும், அவரது மகளையும் தினந்தோறும் குடித்து விட்டு அடிப்பதும் உதைப்பதும், ஆபாசமாக பேசுவதுமாக தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார்.

யார் தட்டிக்கேட்டாலும் அவர்களையும் தாக்குவது, ஆபாசமாக பேசுவது என்று அராஜகம் செய்து வந்துள்ளார். இவருடன் அவருடைய தாயாரும் இணைந்து கொண்டு தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இருவரும் தீக்குளிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.

இதை அறிந்த போலீசார் மல்லிகாவிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தனது 11 வயது குழந்தையுடன் தாய்  தீக்குளிக்க முயற்சி செய்தது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman and girl tried sucide in didnukal collector office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->