மனைவி இறந்த கையோடு கணவன் எடுத்த விபரீத முடிவு..! சோகத்தில் உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் மனைவி தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வள்ளியூர் அருகேயுள்ள வையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் அவரது மனைவி தேவகனி. இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 18ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவகனி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Image result for dead seithipunal

இதை தொடர்ந்து மிகுந்த சோகத்தில் இருந்துவந்த மாரியப்பன், தனது நான்கு குழந்தைகளையும் இனி எவ்வாறு வளர்ப்பது என்று பலரிடமும் புலம்பிவந்துள்ளார்.

இந்த நிலையில், சமூகரெங்கபுரம் தொலைபேசி நிலையம் எதிரே உள்ள வேப்பமரத்தில் மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்த்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife And Husband Dead


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->