விருதுநகரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!
viruthunagar daugther harassment for father arrested
விருதுநகர் : சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 19 வயது மகள் சிவகாசியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
மாணவியின் தந்தை மற்றும் தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும், மாணவியும் கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சிவகாசியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று மாணவி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்க்கு வந்த மாணவியின் தந்தை, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தந்தையின் பிடியில் இருந்து தப்பி மாணவி வெளியே ஓடிவந்துள்ளார். அந்நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு தாய் வரவே, தந்தை தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்ற நடந்த சம்பவத்தை மாணவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தாய், கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாய் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார்அளிக்கவே, புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
viruthunagar daugther harassment for father arrested