தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன்.. தாய் செய்த தரமான சம்பவம்.!
Viruthunagar abusing case
விருதுநகர் மாவட்ட இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் லட்சுமியாபுரம் பகுதியில் நவீன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். நவீன் குமார் கோயம்புத்தூரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கொத்தங்குளம் பகுதியில் உறவுப் பெண்ணான சிறுமி தங்கை முறையில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அந்த சிறுமிக்கு நவீன்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது நவீன்குமார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Viruthunagar abusing case