5 வயது சிறுவனை கொலை செய்த நபரை உயிருடன் எரித்த கிராம மக்கள்..!
Villagers burn alive the man who killed a 5-year-old boy
5 வயது சிறுவனை கொலை செய்தவரை உள்ளூர்வாசிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் திப்ருஹர் மாவட்டத்தில் தோலஜன் பகுதியில் தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் உஜ்ஜல் முரா என்ற 5 வயது சிறுவன் விளையாடியுள்ளான். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சுனித் சிறுவன் விளையாடுவதை கண்டு ஆத்திரமடைந்தார்.
அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சிறுவனை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் சுனித்தின் வீட்டிற்கு சென்று அவனை தாக்கியுள்ளனர். மேலும், அவர் உடலில் தீ வைத்து கொளுத்தினர்.
இது குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர் அவரின் உடலை மீட்ட பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
English Summary
Villagers burn alive the man who killed a 5-year-old boy