தூய்மை பணியாளரை கௌரவபடுத்திய விஜய் மக்கள் நிர்வாகிகள்.. பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களிடம் உரையாற்றினார்.

அதேபோல் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தேசியக்கொடி ஏற்று வைத்தார். மேலும் தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மை பணியாளரை வைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். அதன் பின்னர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam admins respect public servants in Covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->