வா தலைவா.. அரியாசனம் காத்திருக்கிறது - வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


வா தலைவா.. அரியாசனம் காத்திருக்கிறது - வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்.!

முன்னணி நடிகரான விஜய்யின் லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று அதன் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. 

அதாவது, சமீபத்தில், நடிகர் விஜய் பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி  உள்ளிட்ட  பல்வேறு அமைப்பினருடன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மறுபக்கம் விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து ஆர்வமுடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.  அந்த வகையில், மதுரை மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் மற்றும் காமராஜர் உள்ளிட்டோருக்கு நடுவே விஜய் நிற்பாத்து போல் உள்ளது.

மேலும், தம்பி பொறுத்தது போதும் வா... தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க! நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது. "நாளைய முதல்வர் நீயே" என்று வாசகங்கள் எழுதபட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பலமுறை அறிவுரை வழங்கி வருகிறார். இருப்பினும், விஜய் ரசிகர்கள் தங்களது மன்றத்தின் பெயர்களை குறிப்பிடாமல், போஸ்டரை அடித்து ஒட்டி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay fans paste poster viral in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->