#BREAKING || வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.!!
Vellore district education officer suspended for improper exam duty
தமிழகம் முழுவதும் இன்று 12-ம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Vellore district education officer suspended for improper exam duty