எல்இடி திரை நீக்கம் - தமிழக அரசை சாடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து வருகிறது.  இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தை எல்இடி திரையில் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரை காவலர்களின் உத்தரவுப்படி நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு முன் மொழிந்துள்ளார்.

அதாவது, தம்நிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. திமுக அரசு குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது. எல்இடி திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister nirmala seetharaman speech abaout kamatchi amman temple led remove issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->