அப்படியென்றால் உதயநிதியை 'இளம் பெரியார்' என சொல்லலாமா? - கே.எஸ்.அழகிரி கருத்து! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, ''காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் சனாதனம் குறித்த கருத்து தெளிவான பதிலை கொடுத்துள்ளார். 

பேசுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. புதியதாக எந்த ஒரு தகவலையும் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தான் இவர் தற்போது தெரிவித்துள்ளார். 

எனவே உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என சொல்லலாம். உத்திரப்பிரதேச சாமியார் தெரிவித்த கருத்து சனாதானத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது. 

கருத்து தெரிவித்தாலே தலை போய்விடும் என்றால் தேசத்தில் ஜனநாயகம் எங்கு உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது. 

இந்து அறநிலையத்துறை உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கேட்டு மூடநம்பிக்கை இல்லாத துறையாக மாற்ற வேண்டும். அமைச்சர் சேகர்பாபு சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது தவறு இல்லை'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi called Ilam Periyar KS Alagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->