கடலூரில் பரிதாபம் : கணவனை கொன்ற மனைவி மாமனார் கைது.!! - Seithipunal
Seithipunal


கடலூரில் பரிதாபம் : கணவனை கொன்ற மனைவி மாமனார் கைது.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கும், செம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் சந்தியா என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இதற்கிடையே ராமமூர்த்தி தினமும் மது அருந்தி விட்டு வந்து சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக, சந்தியா கடந்த இரண்டு மாதங்களாக செம்மங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். 

இந்தநிலையில், ராமமூர்த்தி இன்று மதியம் மது போதையில் சந்தியாவின் தாய் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, சந்தியா மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட இருவரும் கயிறு கொண்டு ராமமூர்த்தியை கட்டி அடக்க முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ராமமூர்த்தி கழுத்து இறுகி உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமமூர்த்தியின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக சந்தியா மற்றும் அவரது தந்தை ராமமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kill ,man in cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->