பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அரசு பேருந்து.!
two government bus accident in bamban bridge
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ,இரண்டு பேருந்துகளிலும் பயணித்த ஓட்டுநர்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கும், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியில் மழை பெய்ததால் பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக, பேருந்துகள் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
English Summary
two government bus accident in bamban bridge