உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்கம்..! விமான நிலையத்தில் பரபரப்பு கிளப்பிய பயணி! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. 

இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மாதம் திருச்சி வந்தடைந்தது. 

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக பயணி ஒருவர் சென்றதை சுங்கத்துறை அதிகாரிகள் பார்த்தனர். 

பிறகு பயணியை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் தனது உடலில் ரூ.  66.68 லட்சம் மதிப்பில் ஆன 1061 கிராம் தங்கத்தை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy airport smuggling gold seized


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->