ஓசூரில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக! - Seithipunal
Seithipunal


ஓசூரில் நேற்று அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் 350 பேருக்கு கை கடிகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி: ஓசூரில் நேற்று அரசு போக்குவரத்து துறை அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கை கடிகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

ஓசூரில் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முதற்கட்டமாக, ஓசூர் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை சேர்ந்த நகர மற்றும் புறநகர் விரைவு பேருந்துகளில் பணிபுரியும் 350 தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கை கடிகாரங்களை வழங்கினர். 

மேலும் இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா. ராசு மாநில பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளும், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் மதன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport department employee wrist watch


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->