விசாரணைக்கு வரும் தமிழக அமைச்சர்களின் வழக்குகள் - எதிர்பார்ப்பில் கட்சியினர்.!
today hearing of tamilnadu ministers case
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த கீழ் நீதிமன்றங்கள், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகளை தினமும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தலைமை நீதிபதி அந்த உத்தரவு என்ன என்பதை படித்து பார்க்கவேண்டும். அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை இன்று தள்ளிவைத்தார். அதன்படி இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.
English Summary
today hearing of tamilnadu ministers case