நியோமேக்ஸ் முறைகேடு || நாளை முதல் புகார் அளிக்கலாம்! பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பலரிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு பெற்று ஏமாற்றியதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க வசதியாக நாளை காலை 9 மணி முதல் மதுரை புதுநத்தம் ரோட்டில் அமைந்துள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு மனு மேலா நடைபெற உள்ளது.

மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதற்கும் தயாராக இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் நிறுவன பொறுப்பாளர்கள், இயக்குனர்கள், முகவர்கள் குறித்தான விவரங்களை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice Neomax fraud case complaint filed from tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->