அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு..!!
TNpolice Case registered against BJP Sasikala Pushpa under 3 sections
தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா திமுக அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பெண் கவுன்சிலர் அதிர்ஷ்டமணி, அவரது கணவர் ரவீந்திரன், லெவஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன், திமுக கவுன்சிலர் இசக்கி ராஜா உள்ளிட்டோர் இரண்டு ஆட்டோவில் அடி ஆட்களுடன் சென்று சென்று சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ரத்தினராஜ் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினர் மூன்று திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனைவரையும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பா மீது திமுக வடக்கு மண்டல மாணவரணி நிர்வாகி சீனிவாசன் என்பவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தமிழக பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா மீது அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
TNpolice Case registered against BJP Sasikala Pushpa under 3 sections