தஞ்சை || நடைப்பயணத்துடன் வாக்கு சேகரித்த முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார்.

நேற்று மாலை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான இன்று மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஊர்குடியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி, நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் உள்ளிட்டோரை ஆதரித்து பேசுகிறார்.

இந்த நிலையில், திருச்சி சிறுகனூரில் தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஓட்டலில் இரவு தங்கினார். இன்று அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் காலை நேரத்தில் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார். 

சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்து அவர்களிடம் உரையாடிய அவர், அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அங்கு முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mk stalin vote collection in thanjavur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->