நெருங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் - பரபரப்பில் தலைமை செயலகம்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 12-ந்தேதி தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஆரம்பமாக உள்ளது. இதையடுத்து 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து இருபதாம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும், 21-ந்தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொரை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதாவது தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதோடு, சட்டமன்ற உறுப்பினர் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் இன்றே முடிக்குமாறு பணியாளர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly meeting start coming 12


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->