லட்ச கணக்கில் விற்பனையான மாநகராட்சி நிலம் - புகாரில் சிக்கிய 3 பேர் கைது.!
three peoples arrested for sale corporetion land in coimbatore
லட்ச கணக்கில் விற்பனையான மாநகராட்சி நிலம் - புகாரில் சிக்கிய 3 பேர் கைது.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோபாலன். சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் நிலம் ஒன்றை வாங்க முடிவு செய்தார்.
இந்த நிலையில் மனோபாலனுக்கு கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் அவருடைய மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களின் உறவினரும் நில புரோக்கருமான பன்னீர் செல்வம் ஆகியோர் அறிமுகம் ஆகினர். பின்னர் அவர்கள் பல இடங்களில் நிலம் இருக்கிறது என்று இடத்தை காட்டி உள்ளனர்.
அந்த வகையில், குனியமுத்தூர் அருகே 8 சென்ட் நிலம் இருப்பதாக கூறி அதை காட்டி உள்ளனர். அந்த நிலம் மனோபாலனுக்கு பிடித்ததால் அதனை வாங்க திட்டமிட்டார். அப்போது அந்த நிலம் ரூ.44 லட்சம் தான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே மனோபலமும் கடந்த 2021ம் ஆண்டில் பணம் கொடுத்து நிலத்தை பத்திர பதிவு செய்தார். இதற்கிடையே மனோபாலனுக்கு தான் வாங்கிய நிலத்தின் மீது சந்தேகம் எழுந்ததால் நிலம் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்தார்.
அந்த விசாரணையில் தான மனோபலம் வாங்கிய நிலம் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலம் என்பதும், பிரபாகரன் உள்பட மூன்று பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் பிரபாகரன் அவருடைய மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி நிலத்தை விற்று மோசடி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
three peoples arrested for sale corporetion land in coimbatore