ஆபாச செயலி மூலம் மோசடி - கூண்டோடு பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஆபாச செயலி மூலம் மோசடி - கூண்டோடு பிடித்த போலீசார்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவிநாசி அருகே சேவூர், கருமாபாளையத்தில் குபேரன் நகரில் ஆபாச ஆப் மூலம் பெண்களின் போட்டோக்களை பகிர்ந்து, சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் படி போலீசார், குபேரன் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், அவிநாசி வெள்ளியம் பாளையத்தைச் சேர்ந்த நிருபர் விக்னேஷ்வரன், அருண்குமார் மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோர், கருமாபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

அங்கு ஆபாச ஆப் மூலமாக, சில இளம்பெண்களின் போட்டோக்களை ஆண்களுக்கு பகிர்ந்து, அவர்களிடம் பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து இளம்பெண் ஒருவரையும் மீட்டு, மொபைல் போன், கார், டூ - வீலர் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for money fraud in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->