600 கிலோ கஞ்சாவுடன் மினி கண்டெயினர் லாரி பறிமுதல்.!! மத போதகர் உட்பட 3 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


600 கிலோ கஞ்சாவுடன் மினி கண்டெயினர் லாரி பறிமுதல்.!! மத போதகர் உட்பட 3 பேர் கைது.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை பதிவு எண் கொண்ட ஒரு மினி கண்டைனர் லாரி ஒன்று வந்தது.

அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றனர். அப்போது லாரி ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் லாரியை திறந்து பார்த்துள்ளனர்.

அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியில் வந்த 3 பேரையும் பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் தூத்துக்குடிக்கு கஞ்சாவைக் கொண்டு சென்றதும், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புத பாரத், பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு மற்றும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், மினி கண்டைனர் லாரி மற்றும் அதிலிருந்த  300 பாக்கெட்டுகளில் கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kidnape drugs in thoothukudi kovilpatti


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->