ஒரே தேங்காயில் மூன்று அறைகள் - திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஒரே தேங்காயில் மூன்று அறைகள் - திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி.!

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். 

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றான இங்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தேங்காய் உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தேங்காய் உடைக்குமாறு கோயில் பணியாளர்களிடம் கொடுத்துள்ளார். 

அதனை உடைத்து பார்த்த போது, ஒரே தேங்காய்க்குள் மூன்று அறைகள் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து பக்தர்கள் பெரும் பரவசத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். 

மேலும், இது கடவுளின் சித்தம் என்றுக் கூறி அருணாச்சலரேஸ்வரரை வணங்கி சென்றனர். இதற்கிடையே இந்த மூன்று அறைகள் கொண்ட தேங்காய் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three compartments at one coconut in tiruvannamalai temple after broke


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->