தூத்துக்குடி அருகே சோகம் - குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன் - மீனா தம்பதியர். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இவர்கள் மூன்று பேரும் நேற்று பிற்பகல் தங்களது உறவினர்களுடன் பேரூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது, மூன்று குழந்தைகளும் உறவினர்களுக்குத் தெரியாமல் குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்று குளத்தில் மூழ்கி, மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மூன்று குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three childrens died drowned water in thothukudi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->