கரோனாவிற்கு தூத்துக்குடி நபர் பலி... தமிழகத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!
thoothukudi man died due to corona virus positive symptoms
கரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மருத்துவ குழுவும் முதல்வரிடம் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு இந்திய அளவில் இரண்டாவது பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறிய நிலையில், நேற்றுவரை 834 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும், 8 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மேலும் 77 பேருக்கு கவ்ர்னா உறுதி செய்யப்பட்டு, மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 911 பேராக உயர்ந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த நபர் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தலைமை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
thoothukudi man died due to corona virus positive symptoms