தூத்துக்குடி | தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் கொடிவேல் (வயது 40). இவர் புளியம்பட்டி காவல் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடிவேல் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தலைமை காவலர் கொடிவேல் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. 

மேலும் இந்த தற்கொலை தொடர்பாக மணியாச்சி டி.எஸ்.பி நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தலைமை காவலர் ஒருவர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi chief guard committed suicide Police investigation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->