தட்டிக்கேட்ட காவலரை சரமாரியாக தாக்கிய போதை கும்பல்! மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு!
Thiruvallur drug gang assaulted policeman
திருவள்ளூர், சரஸ்வதி நகரச் சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 48) இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தனி படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் ஏரிக்கரை பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த 8 பேர் கொண்ட கும்பல் மது போதையில் ரகளை செய்துள்ளனர்.
இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனால் போதை கும்பலுக்கும் நரேந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சாதாரண உடையில் இருந்த நரேந்திரன் போலீஸ்காரர் என தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி அருகில் இருந்த இரும்பு கம்பியை கம்பியால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள் படுகாயத்துடன் கிடந்த நரேந்திரனை பார்த்து அதிர்ச்சி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழில் பேட்டையில் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிப்பதற்காக சென்ற போலீஸ்காரரை தாக்கியதை தொடர்ந்து மீண்டும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.
English Summary
Thiruvallur drug gang assaulted policeman