திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை! விசாரணையில் கிடைத்த ஆதாரம்! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். 

இன்று தம்பதியினர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் பெற்றோரை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். 

பின்னர் குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். இருப்பினும் கிடைக்காததால் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் ஒரு கேமரா காட்சியின் பதிவில் குழந்தையுடன் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை மீட்பதற்காக தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur Murugan Temple kidnapped child 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->