கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, கார்-இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து
The Tempo lost control and the car collided with the twowheeler
கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வாகனம் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஒழுங்கினசேரியல் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு டெம்போ வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.
அப்பொழுது அப்பகுதியில் நின்ற கார் மீது டெம்போ மோதி, பின்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை இடித்துவிட்டு, ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்து நின்றது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வடசேரியை சேர்ந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளார். மேலும் அப்பகுதியில் இருந்த ஏடிஎம் மையம் மற்றும் மூன்று கடைகள் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர், டெம்போ ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்ததில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The Tempo lost control and the car collided with the twowheeler