சேலம் | 10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - டெம்போ டிரைவர் கைது - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டெம்போ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர்.

இதில், சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் குருநாதன் (40) என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குரு நாதனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tempo driver arrested for pregnant 10 th class girl in salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->