கோழி கூண்டு செய்த கோவில் பூசாரி..! அடுத்த நொடியே நேர்ந்த சோகம்..! கன்னியாகுமரியில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழி கூண்டு செய்த கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மானான்விளை பகுதியை சேர்ந்தவர் கோவில் பூசாரி கருணாகரன் (59). இவரது மனைவி சிந்து இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் நேற்று இரும்பு கம்பிகளை வைத்து கோழிக்கூண்டு ஒன்று செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கோழி கூண்டு செய்வதற்கு மின்சார எந்திரங்களை பயன்படுத்தியதால் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு கருணாகரனை மின்சாரம் தாக்கியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக பலத்த காயமடைந்த கருணாகரனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கருணாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல் போலீசார் கருணாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple priest killed by electric shock in kanniyakumari


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->