பள்ளிக்கு மகளுடன் சென்ற ஆசிரியர் - வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்.!
teacher died for accident in chennai old perungalathur
பள்ளிக்கு மகளுடன் சென்ற ஆசிரியர் - வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்.!
சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் பார்வதி நகரை சேர்ந்தவர் ரேவதி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் பார்வதி வழக்கம்போல் பள்ளிக்கு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் பார்வதி மதனபுரம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எரிவாயு குழாய் பதிப்பதற்காக சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளம் இருந்ததால், அப்போது ஆசிரியர் பார்வதி வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்துள்ளார். இதனால், நிலை தடுமாறி வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்துள்ளனர்..
அதே சமயம் தனியார் பள்ளி வேன் ஒன்று இவர்களை கடந்த நிலையில், பள்ளி வாகன பின் சக்கரத்தில் இருவரும் சிக்கியுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஓடை வந்து இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆசிரியர் பார்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மக்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உயிரிழந்த ஆசிரியர் பார்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
teacher died for accident in chennai old perungalathur