லண்டனில் உயிரிழந்த தமிழக மாணவர் - உடலை மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


லண்டனில் உயிரிழந்த தமிழக மாணவர் - உடலை மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஜீவ்நாத். இவர் கடந்த ஆண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டின் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், ஜீவநாத் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி படுகாயங்களுடன் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு இன்று காலை மெயில் ஒன்று வந்துள்ளது. 

அந்த மெயிலில், மாணவர் ஜீவ்நாத் பல்கலைக்கழகம் அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து ஜீவ்நாத் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

அதன் பின்னர் அவர்கள் தங்களது மகன் ஜீவ்நாத் குளிக்க சென்ற போது இந்த விபத்து நேரிட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? உள்ளிட்ட எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை என்றும், தங்களுக்கு முறையான தகவலை பெற்றுத் தருமாறு இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஜீவ்நாத்தின் பெற்றோர் மகனின் உடலை பெற்றுக்கொள்ள லண்டன் செல்ல இருப்பதாக முடிவெடுத்து அதற்காக மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu students died in london


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->